சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

ஒரு கோடையின் கனவு

06 ஆகஸ்ட், 2012

  
சித்தாந்தன் 

இன்னும் மீதமிருக்கும்
ஒரு கோடையின் கனவு
அந்தியின் நிழலுருக்களாய் அசைகின்றது

நடைவழியில் முகம் திருப்பிய
ஒரு முதியவனின் அகாலப் புன்னகை
தூக்கங்களில் மிதந்து வருகின்றது

'யாரோடும் யாருமில்லை'யென
யாரோ சுவரில் எழுதிய மகா வாக்கியங்கள்
ஞாபகக் காட்டில் புதராய் முளையிடுகின்றன

வேரற்ற கனவு மரத்தின்
இலைகளை உதிர்த்துப் பூக்களைச் சூடும்
சிறுமியின் புன்னகை முகம்
வாழ்வைப் பெரும் கதையாகச் சொல்கிறது

யாரும் உலாவாத நிராதர வெளியில்
இரண்டு பட்ஷிகள்
பசியின்தருணங்களை மேய்கின்றன

இன்னும் இன்னுமாய்
நீளும் பாலையின் எரியும் வர்ணத்தோடு
வாழ்க்கை
ஒரு கொடுங்கனவின்
மூன்று காலத்தோடும்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்